அறிவியல் அறிவோம்!!

நாம் அன்றாட வாழ்வில் ஆபரணங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கும் அறிவியல் உண்மைகளை இன்று அறிவோமா??

முதலில் ஏன் நாம் மோதிரம் போட்டுக் கொண்டிருக்கிறோம்??  வெளி நாட்டுமக்கள் மோதிரம் அணிந்துதான் திருமணம் செய்து கொள்வார்கள் அதற்கான அறிவியல் உண்மையை அறிவீர்களா??
மோதிர விரலில் எப்பொழுதும் சிறிது அழுத்தம் இருந்தால் செக்ஸுவல் ஹார்மோன் சீராக இருக்குமாம்.

கழுத்து வங்கி அதாவது நெக்லஸ் என சொல்லப்படும் அந்த ஆபரணம் அணிவதன் மூலம் உங்கள் கழுத்திக்கும் உடலுக்கும் உள்ள ரத்த ஓட்டம் சீராக அமையுமாம்.

நெற்றிச்சுட்டி அணிவதன் மூலம் உங்களுக்கு தலைவலி, சைனஸ் ப்ராப்ளம்  வராதாம்.

பிறந்தவுடனே காது குத்தும் வழக்கம் கொண்டவர்கள் நாம். காரணம் காது நரம்புகளில்  சிறிது அழுத்தம் இருந்தால் நமக்கு அறிவாற்றல் அதிகமாகுமாம்.

வளையல் அணியும் போது கைகளில் ரத்த ஓட்டம் சீராகுமாம்.  மூக்குத்தி அணியும்போது பெருங்குடலும் சிறுகுடலும் எந்த ஆபத்தும் வராமல் நோய்களெல்லாம் குணமாகுமாம்.

கொலுசு அணிவதன் மூலம் கல்லீரல் மண்ணீரல் கர்ப்பப்பை என அனைத்திற்கும் பாதுகாப்பு தரும்.

இன்று திருமணம் ஆன உடனே மூன்று  மெட்டிஅணிந்துகொள்ளும் நமக்கு தெரிய வாய்ப்பில்லைதான் ஒவுவொரு விரலில் மெட்டி இடுவதற்கும் ஒரு பொருள் உண்டு.  திருமணமான முதல் நாள் முதல் ஒரு பெட்டியை மட்டுமே அணிய வேண்டும்.  அதற்கு காரணம் அது நமது கர்ப்பப்பையை சீராக்கும். இரண்டாவது மெட்டி  குழந்தை பிறக்கும் தருவாயில் தாய்ப்பால் அதிகம் சுரக்கும் உதவும்.


இவை எல்லாவற்றையும் தாண்டி திருமணமான ஒரு பெண்ணிற்கு எதற்கு இத்தனை ஆபரணங்கள் சூட்டி அனுப்பி வைக்கின்றோம் என்று தெரியுமா ??

பெண்கள் இயற்கையிலேயே உணர்ச்சி வசப்படுவார்கள். அதுவும் தன் பிறந்து பழகி வாழ்ந்து செழித்த அந்த இடத்தைவிட்டு முழுதாய் அறியாத ஒரு ஆணை நம்பி செல்லும்பொழுது எப்பேர்ப்பட்ட மனப்போராட்டம் அவளுக்குள் இருக்கும் என்பதை சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன ??

உணர்ச்சிகளை கட்டுப் படுத்துவதற்காக தங்க ஆபரணங்களை அணிவிக்கின்றனர்.  உடம்பில் தங்கம்ஙஉரசும் போதெல்லாம் உணர்ச்சிகள் கட்டுப்பாட்டுடன் இருக்கும் என்பதே அறிவியல் உண்மை.

வாசிப்போம் சுவசம் உள்ளவரை!!

Comments

Post a Comment

Popular posts from this blog

ஆடி ஒன்னு அப்படின்னா???

ஊடலில் காதல்

சில நேரங்களில்... சில மனிதர்கள்...