Posts

Showing posts from 2022

அன்னியம்

Image
25 வருடமாக பெற்றெடுத்த பிள்ளையை ஒரு அன்னியனுக்கு திருமணம் செய்து வைத்த பின் தன் கடமை முடிந்தது என உங்களால் எப்படி எண்ண முடிகிறது??  அக்கினியை அவள் வலம் வந்ததும் ஈன்றெடுத்தவரே அந்நியமாய் உங்களால் எப்படி முடிகிறது???  தலை நிமிர்ந்து நட என கூறிய உங்கள் வளர்ப்பு, திருமணமானதும் எதிர்த்துப் பேசாதே என்று சொல்ல உங்களால் எப்படி முடிகிறது???  நேர்கொண்டு பார்வை நிமிர்ந்த நன்னடை என்றெல்லாம் ஊட்டி வளர்த்த உங்களால், கணவன் அடித்தாலும் சத்தம் போட்டு கூட அழக்கூடாது என்று சொல்ல உங்களால் எப்படி முடிகிறது???  திருமணம் முடிந்து அவள் உங்கள் வீடு வந்தாள் உங்களால் அவளை விருந்தாளி என எப்படி உங்களால் உபசரிக்க முடிகிறது ??? தன் பிள்ளையை காட்டிலும் மருமகனுக்கு பிடித்ததே சமைக்க வேண்டும் என்று உங்களால் எப்படி எண்ண முடிகிறது???  போகின்ற வீட்டிலும் சரி உங்கள் வீட்டிலும் சரி திருமணத்திற்கு பின் அவள் எங்கு தான் ஓய்வெடுப்பாள்?? குடிப்பழக்கம் தப்பு என்று சொல்லி வளர்த்த நீங்கள் கணவன் என்றால் குடிப்பான் சகித்துக் வாழ கற்றுக்கொள் என்று சொல்ல உங்களால் எப்படி முடிகிறது??? சுய கௌரவம் சொந்த உழைப்பில் ...

அட யார்ரா இவள்???

Image
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்றார் பாரதியார்.  பாவம் !  அவர் ஒரு ஆண் என்பதால் பெண்கள் படும் இன்னல்களை புரிந்து கொள்ளவில்லை.  ஒல்லியாக இருந்தால், உடல் சற்று பருமனாக இருந்தால், சற்று மாநிறம் ஆக இருந்தால், உயரம் கொஞ்சம் கம்மியாக இருந்தால், அதே உயரம் சற்று அதிகமாக இருந்தால், நடந்தால், சிரித்தால், பேசினால் என்று எது சொன்னாலும் அவளைக் கைகாட்ட ஒரு ஆள்காட்டி விரல் சூழ்ந்து கொண்டு இருக்கிறது.  பிறப்பிலிருந்து அவள் பெற்றோர்களுக்கு பிடித்தவாறு நடந்து கொள்கிறாள் .  சற்று வளர்ந்த பின்னே கணவருக்கு பிடித்த மாதிரி வாழ வேண்டும் என்று வடிவமைக்கப்படுகிறாள். குழந்தை பெற்ற பின் குழந்தைகளுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறாள். இதற்கு இடையே அவ்வப்போது சின்ன சின்ன சுதந்திரங்களை அவள் பெற்று அதுவே நம் வாழ்வை நகர்த்தி செல்லும் திரவ சக்தியாக தன் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறாள்.  உலகில் 94 சதவீதம் பெண்கள் பாடி ஷேமிங் எனப்படும் பெரும் நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இது அவர்களாக தங்கள் உடம்பை நேசிக்க இயலாமல் அல்ல....  பிற அன்னிய சக்திகளால் அடுத்தவர்களுக...

கொடிய விஷம்

Image
  வாசிப்பாளர்களுக்கு வணக்கம் எ பாய்சன் டிரி ( A Poison Tree) என்ற ஒரு கவிதையை இன்று தான் படித்தேன். வில்லியம் பிளேக் என்பவரால் இது அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது.  எனக்கு எப்படி இது சரியான நேரத்தில் என் பார்வை சிக்கியபடி உங்களில் சிலருக்கும் இது பயன்படலாம் என்று இங்கு பகிர்கிறேன். உலகிலேயே மிகக் கொடிய விஷம் எது என்று இந்த கவிதை நமக்கு அறிய வைக்கும் .  தனது முதலாவது வரியில் என் நண்பரோடு நான் கோபமாக இருந்தேன். அதை அவரிடம் வெளிப்படுத்தினேன் ஆகையால் அது அத்தோடு நின்று விட்டது என்றும் தனது மூன்றாவது வரியில் நான் என் எதிரியுடன் கோபமாக இருந்தேன். ஆனால் நான் அதை அவனிடம் சொல்லவில்லை. ஆகையால் அந்த கோபம் எனக்குள் அதிகமாக வளர்ந்தது என்றும்  தனது கருத்தை வெளிப்படுத்துகிறார்.  அடுத்து நான் அந்த கோபத்திற்கு தினமும் பயத்தால்... தண்ணீர் விட்டு வளர்த்தும் இரவும் பகலுமாய் கண்ணீர் விட்டு அழுதும் வெயிலில் சிரித்துக்கொண்டே வளர்த்தேன். எனக்குள் நானே அன்பாக ஏமாற்றி பேசி அதை வளர்த்துக் கொண்டேன் அதனால் திடீரென்று ஒரு நாள் எதிர்பாராமல் அந்த கோபம் என்ற மரத்தில் சிவப்பாக அழகான ஒரு ஆப்பிள் ...

பொங்கல் வாழ்த்துக்கள்

Image
 அனைத்து நாட்களிலும் விழாவாக கொண்டாடும் தனித்துவம்  கொண்டது நம் தமிழரின் பண்பாடு.  " போக்கி" என்பதன் சொல் மருவி "போகி" என்றானது. அதாவது பழையன கழிதலும், புதியன புகுதலுமே போகி.  அக்காலத்தில் தமிழர் திருநாள் அதாவது தை 1 அன்று அறுவடை செய்வதாக கருதப்படுகிறது. அந்நாளில் புது நெல் மற்றும் தானியங்கள் வீட்டில் கொண்டுவந்து சேர்க்கப்படும். அச்சமயத்தில் போகி அன்று வீட்டை சுத்தம் செய்து பழைய தானியங்கள் எல்லாம் அப்புறப்படுத்தி புதியதை வரவேற்கும் முறையாக கொண்டாடப்பட்டது தான் இந்த போகி பண்டிகை. நாட்கள் செல்ல செல்ல பழையன எரித்து புதியன வாங்கவேண்டும்  என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டோம் . ஆனால் இன்று இருக்கும் காலகட்டத்தில் போகியை வேறுவிதமாகவும் கொண்டாடலாம். பழைய  கசப்பான அனுபவங்களையும், காயங்களையும் மறந்து நம்மை நாமே மன்னித்து அதை ஏற்றுக்கொண்டு, மறுக்காமல் அடுத்த வருடம் தமிழர் திருநாள் தொடங்கும் அன்று புதிதாக பிறந்து... சென்ற வருடம் செய்த தவறையும் சென்ற வருடம் அடைந்த துயரத்தையும் அனுபவிக்காத அளவு சரியான முறையில் வாழ்க்கை நடத்த போகி அன்று நம் கஷ்டங்களை எல்லாம் போக்கும் விதமாக...