Posts

Showing posts from November, 2024

ஊடலில் காதல்

Image
 வாசிப்பவர்களுக்கு வணக்கம்...  வாய்மொழியால் பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும் சில நேசத்தின் இருப்பு அந்த உறவுகளுக்கு தெரியுமே... பிறருக்கு பாசக்காரி ஆனாலும் நமக்கு மட்டும் ஏனோ கோவக்காரி. அடுத்தவர்களுக்கு அவள் அடக்கம் ஆனவள். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே அவள் அடங்காப்பிடாரியாய்.   சில உறவுகளில் ஏனோ தராசு வைத்து அன்பு காட்டுவதில்லை. இவ்வுலகில் ஒன்று கூட இன்னொன்று குறைய இருப்பது தான் மிகச் சரியான அளவில் கலந்து பருகும் காதல் பானம். அடிக்கடி கோபித்துக் கொள்ளும் அழகிய உறவுகள் கிடைப்பதெல்லாம் அரிது தானே. கோவமாய் இருக்கிற பொழுதும் நான் கோபமாகத்தான் இருக்கிறேன் என்று நிமிடம் ஒரு முறை நிரூபித்து காத்துக் கொண்டிருக்கும் உறவுகள் அழகியலில் சேர்க்கப்பட வேண்டும். நெருக்கமானவர்களின் கோபம் நாம் கொஞ்சம் கொஞ்சி பேசும் வார்த்தையில் கெஞ்சும் அந்த நொடியில் காணாமல் போய்விடாதா?? பேசியே சிக்கலில் விளைவிக்கவும்....  பேசாமல் சிக்கலை வர வைக்கும் கொண்ட திரவ சக்தி. எப்பேர்பட்ட கோபமும் இரண்டு கொஞ்சலில் முடிந்து விடும்.  ஆசை வார்த்தைக்கு அசைந்து போகாத மனம் உண்டா?        ...

தொலைந்தது நீயா??

Image
 வாசகர்களுக்கு வணக்கம்,  காலையில் அரக்க பறக்க எழுந்து... உண்ணும் உண்ணாமல் வேலைக்கு சென்று...  இரவு தூங்குவதற்காக மட்டுமே வீடு திரும்பி ... எதற்காக இந்த வாழ்க்கை??  எல்லாம் வயிற்றில் புலப்பிற்கு என்று சொல்லிக் கொண்டாலும்... அந்த வயிற்றுக்கு சாப்பிட கூட நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இந்த இயந்திர உலகத்தில் சற்று அமைதியாக உட்கார்ந்து சிந்தித்துப் பாருங்கள். இது நீதானா ?? இந்த வாழ்க்கையை தான் நீ வாழ ஆசைப்பட்டாயா?    அன்று அன்னியர் யாரோ ஒருவர் என்னுடன் வீட்டுக்கு வந்து விடுகிறாயா? உனக்கு நிறைய சாப்பிட தருகிறேன் என  சொல்லும் போது அந்த வீட்டை விட்டு அவர்கள் பின்னாலே நம்பிக்கையுடன் பயணிக்க துணிந்த நாம்....  இன்று உனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன், நீ மட்டும் போதும் . நீயே என் உலகம். என யாராவது சொன்னால் கூட ஏன் நம்ப மறுக்கிறது இந்த மனம்??                               Pc: Peakpx திடீரென்று யாராவது ஒருவர் பாசமாக பேசினால் ... எதற்காக என்று ஏன் இந்த புத்தி யோசிக்கிறது??  ச...

எல்லோருக்கும் சொல்கிறேன்

Image
 நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் நானும் என் பேனாவும்.... வாசகர்களுக்கு வணக்கம்... கடவுள் மனிதர்களை பலவிதமாக படைத்திருக்கிறார்.  பல பணிகளும் பல பண்புகளுக்கு மத்தியில் மனித இனம் ஒரு புரியாத புதிர் தான். எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து பல மனிதர்களை சந்திக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமாயின் அதை ஏன்  சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது??  இந்த வாழ்வு எவ்வளவு அழகானது தெரியுமா? அதிலும் அவ்வையார் கூற்றின்படி " மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடுபேடு, நீங்கிப் பிறத்தல் அரிது" கடவுளின் கிருபையால் கண்டு உண்டு கேட்டு பார்த்து வியக்கும் இந்த வாழ்க்கையை நாம் எவ்வளவு கடினமாக்கி கொண்டிருக்கிறோம் தெரியுமா ??   இந்த மனித இனம் சந்தோஷமாகத்தான் இருக்கிறதா? இல்லையே...  எதனால் சந்தோஷமாக இல்லை??    முடிந்த அளவில் ஒருவருக்கு அன்பை பகிருங்கள். இல்லை என்றால் விட்டு விடுங்கள். தன்னை விட ஒருவர் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றால் அதை தாங்கிக் கொள்ள நமக்கு மனம் இருக்கிறதா? தன்னால் முடியாததை இன்னொருவர் செய்து காட்டினால் அதற்காக வாழ்த்துக்கள் சொல்லவில்லை என்றாலும் அவர்களைப் பற்ற...