இது உங்களுக்காக தான்
என் நலன் விரும்பிகளே ... இந்த பதிவு உங்களுக்காகத்தான்!! எனக்கு தெரியும்.. கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும்! கல்யாணம் நம் வாழ்வில் முன்னேற்றுவதற்கான முதல் படி! ஆனந்தத்தின் அடிப்படை திருமணம் ! ஆசையின் ஆணிவேர் திருமணம்! வாழ்க்கையை முழுமை திருமணம் ! என்னால் புரிந்துகொள்ள முடிகிறது... வாழ்நாள் முழுவதும் துவண்ட போது தாங்கும் அவன்.. கண்ணீர் சிந்தும் போதெல்லாம் தோள் கொடுக்கும் அவன்.. எதற்கு வாழ்கின்றோம் என்று தோன்றும் போதெல்லாம் பிள்ளைகளின் முகம்... வாழ்க்கையின் நிறைவை நிறைவேற்றும் திருமணம்!! எல்லாம் சரிதான். .. எனக்கு ஒரு உண்மையை மட்டும் சொல்லுங்க. திருமணம் செய்து பத்து நாட்கள் கூட தாண்டிடாமல் எனக்கு உடனே அழைத்து தயவுசெய்து திருமணம் மட்டும் செய்து கொள்ளாதே! இப்பொழுதே சந்தோஷமாக இருந்து கொள் என்று அறிவுரை கூறும் நண்பர்களே.... பிறகு நீங்களே வயசாயிடுச்சு கல்யாணம் எப்போ என்று கூச்சமே இல்லாமல் கேட்கிறீர்கள். நான் எதை செய்யவேண்டும் இப்போ?? வருடத்திற்கு 1.36 மில்லியன் மக்கள் இந்தியாவில் மட்டும் விவாகரத்து செய்து கொள்கிறார்களாம் .திருமணம் ஆகியும் ...