ஆடி ஒன்னு அப்படின்னா???

     நம்ம எல்லாருக்குமே தெரியும் ஆடி ஒன்னு சொன்னாலே சின்ன வயசுல எப்படா வீட்டுக்கு போவோம்-ன்னு பள்ளியில்  ஆசையாய் காத்திட்டு இருப்போம் இல்லையா??

     காரணம் தேங்காய் சுட்டு அதை உண்பதற்காக மட்டும் அல்ல அதை  செய்வதற்காகவும் தானே??  பள்ளி முடிந்து வீடு வந்ததும் அந்த தங்க தேங்காயை நெருப்போடு  குளிக்க வைத்து, உன் தேங்காயில் விரிசல் என சக நண்பகர்களோடு சண்டையிட்டு ஒருவர் தேங்காயை ஒருவர் உடைத்து உண்ணும் சுகமே....  அடடா...  எச்சில் ஊரும்!!

    ஆடி ஒன்னு எதனால கொண்டாடப்பட வேண்டிய விஷயம்??  என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

     பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த போரில் பாண்டவர்களுடன் சேர்ந்து கண்ணன் ஒரு சூழ்ச்சி செய்கிறான். ஆடி-யின் முதல் அமாவாசை அன்று பலி  கொடுப்பவனே போரில் வெற்றி பெறுவார் என்று சகாதேவன் கூறிகிறான்.  அதனால் கௌரவர்களுக்கும் முன்பாக நாம் பலியிட வேண்டுமென்று அர்ஜுனனின் மகனான அரவாணை பலியிட பாண்டவர்கள் முடிவு செய்கின்றனர்.

     நான் என்னை பலியாகக் கொடுக்க சம்மதிக்கிறேன் ஆனால் அதற்கு முன்பு நான் ஒரு முறையேனும் தாம்பத்தியம் வாழ்க்கையை வாழ ஆசை படுகின்றேன்  என்று கேட்டுக்கொள்கிறான், அரவான்.  கிருஷ்ணனும் அவனது நிலையை எண்ணி தன்னை பெண்ணாக,  மோகினியாக உருவெடுத்து அவனுடன் தாம்பத்தியம் கொள்கின்றனர் இதனால்தான் ஆடி ஒன்னு என்றாலே புதுமண தம்பதிகள் ஒன்று சேரக் கூடாது என்று சொல்வதற்கு காரணம்.

Picture Courtesy : Nandhini.S
        
    ஆடி ஒன்னு அன்று அரவானின் தலை கொய்து அப்போருக்கு பலியிடுகின்றனர் .  தேங்காயை அரவானின் தலை என்றும்,  உள்ளே இனிப்புகளை போட்டும் அதை உடைத்து அதாவது அரவானின் தலையை உடைத்து கொண்டாடுவதால் ஆடி ஒன்னு அன்று தேங்காயை நாம் சுட்டு கொண்டாகிறோம்.


    பூமாதேவியை  பிறந்த மாதம்  ஆடி. அதனால் தான் ஆடி மாதம் என்றாலே அனைத்து அம்மன் கோவில்களிலும் அளவில்லாத ஆனந்தம் பெறுகின்றது.


             இதெல்லாம் இருக்கட்டும் நீங்க தேங்காய் சுட்டிங்களா??

                        வாசிப்போம் சுவாசம் உள்ள வரை!!

Comments

  1. Yanga ourla தேங்காய் sudamatanga ...😭😭😭

    ReplyDelete
  2. Really it's useful information mam 😍👌

    ReplyDelete
  3. ஆடி மாதம் முதலாம் நாளை ஏன் கொண்டாட வேண்டும் என்பதை தேங்காய் உடைப்பதைப் போல அழகாக விளக்கம் கொடுத்தீர்கள். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. thank you for your appreciation sir. keep supporting me

      Delete
  4. Super information about Aadi♥️✨

    ReplyDelete
  5. Supr info dr ❤ I missed this year da

    ReplyDelete
  6. Supr info dr ❤ I missed this year da

    ReplyDelete
  7. Beautiful information in your lovely clearly words Kanmani.... Do more like this to know more about some information by your words Kanmani.... Congratulations😍😍😍😍😍😍😍😍😍

    ReplyDelete
  8. Beautiful information in your lovely clearly words Kanmani.... Do more like this to know more about some information by your words Kanmani.... Congratulations😍😍😍😍😍😍😍😍😍

    ReplyDelete
  9. Ipaiyavathu therijikitta unganala thanks sis

    ReplyDelete
    Replies
    1. No problem.. Keep reading my blog. Will get new information everyday

      Delete

Post a Comment